என்ன கூட்டிட்டு போன, தற்கொலை பண்ணிப்பேன்… ரியல் அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் கனி…

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மீனாட்சி பாடிய பாடலை கனியும் பாட ஷண்முகம் கலங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது பரணி சண்முகத்தை கிளினிக்கிற்கு அழைத்து சென்று கனிக்கு நீ தான் எல்லாம், அவ உன்னை விட்டு போக மாட்டாள் என்று அவனை கூல் செய்கிறாள். மறுபக்கம் கனி தனியாக எங்கோ நடந்து செல்ல வெட்டுக்கிளி இதை பார்த்து விடுகிறான்.

வீட்டில் கனியை காணவில்லை என்று எல்லாரும் பதறி சண்முகத்துக்கு சொல்ல, அந்த மீனாட்சி குடும்பம் தான் கடத்தி இருக்கும் என நினைத்து கொண்டு கோபமாக அங்கு கிளம்பி செல்கிறான், அங்கே மீனாட்சி சௌந்தரபாண்டி ஆகியோர் பேசி கொண்டிருக்கும் போது கனி வருவதை பார்த்து மீனாட்சி சந்தோசப்பட, சௌந்தரபாண்டி ஒளிந்து கொள்கிறார். ஷண்முகம் பரணி இங்கு வர கனியை பார்த்ததும் அப்படியே நின்று விட, மீனாட்சி என் பொண்ணு என் கிட்ட வந்துட்டா என்று சந்தோஷத்தில் நான் உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா என்று பேசி கனியை கட்டி பிடிக்க போக, கனி கையை தட்டி விட்டு அதிர்ச்சி கொடுக்கிறாள்.

பெத்து போட்டுட்டு போயிட்டீங்க, என்னை இவ்வளவு நாளா என் அண்ணன் தான் பாத்துக்கிச்சு, அது எனக்கு அண்ணன் இல்ல அம்மா என்று பேசுகிறாள். எங்க அண்ணனை விட்டு நான் வர மாட்டேன். வலுக்கட்டாயமா பிரித்து கூட்டிட்டு போனா தற்கொலை பணிக்குவேன் என்று கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு மீனாட்சியை மிரட்டி விட்டு கிளம்பி செல்கிறாள்.

கனி ஷண்முகத்தையும் பரணியையும் பார்க்காமல் சென்று விட, கனி பேசியதை நினைத்து ஷண்முகம் சந்தோசப்பட, பரணி இது தான் கனி, அவ உன்னை விட்டு போக மாட்டா என்று சொல்கிறாள். மேலும் மீனாட்சியிடம் சென்று அவ பேசினதை கேட்டீங்களா, இப்படியே கிளம்பி போய்டுங்க என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment