பாக்கியா இடத்தில் நடிகை ராதிகா… பாக்கியலட்சுமி சீரியல் பற்றி பரவிய தகவல் உண்மையா?…

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் சுசித்ராவுக்கு பதில் நடிகை ராதிகா இந்த ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இல்லத்தரசிகளின் பிரதிபலிக்காக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெண்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பு. சீரியல் தொடங்கிய குறுகிய காலத்திலே பாக்கியலட்சுமி சீரியல் வேற லெவலில் ஹிட் அடித்தது. குறிப்பாக பாக்கியவாக நடிக்கும் நடிகை சுசித்ராவை மக்கள் தங்கள் வீட்டில் இருக்கும் சக அம்மாவாக, மாமியாராக, மருமகளாக பார்க்க தொடங்கினர். பெங்களூரை இருப்பிடமாக கொண்ட இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார்.இவரின் நடிப்புக்காகவே இந்த சீரியலை ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வேகமாக இணையத்தில் பரவின.

அதுமட்டுமில்லை சுசித்ராவுக்கு பதில் நடிகை ராதிகா இந்த ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இது சுசித்ராவின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. காரணம், பாக்கியலட்சுமி சீரியலை ஏராளமான பெண்களே விரும்பி பார்க்கின்றனர். குடும்பத்திற்காகவே வாழும் பாக்கியாவை கணவர் கோபி, முதல் மகன் செழியன் எல்லோரும் ஏமாற்ற மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு நடுவில் பாக்கியா குடும்பத்தை வழி நடத்தம் இந்த கதையை பெண்கள் அவர்களின் கதையாகவே நினைத்து பாக்கியாவை தங்கள் இடத்தில் வைத்து பார்க்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு பாக்கியா ரோல் மாற்றப்படுகிறது என தகவல் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி இருக்கையில், இந்த தகவல் பொய், வெறும் வதந்தி மட்டுமே என பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா உறுதி செய்துள்ளார். இதுக் குறித்து பிரபல யூடியூப் வலைத்தள ஒன்று அவரை தொடர்பு கொண்டு இந்த தகவல் பற்றி கேட்டுள்ளது. அதற்கு மிகவும் பொறுமையாக பதில் அளித்திருக்கும் அவர், இது வெறும் வதந்தி தான். ஃநான் இப்போது கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் இருக்கிறேன்.

அப்படி எதாவது முடிவு எடுத்தால் கண்டிப்பாக என ரசிகர்களுக்கு தெரியப்படுத்துவேன் என கூறியுள்ளார். சுசித்ராவின் இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இனிமேல் பாக்கியா இதைப்பற்றி கவலைக் கொள்ள வேண்டாம்.

Related Posts

Leave a Comment