பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை பிரச்சனை… உண்மையை மறைக்கும் கண்ணன் – ஐஸ்வர்யா!

by Column Editor

மூர்த்தி கோபப்படுவார் என கண்ணனும் ஐஸ்வர்யாவும் இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் மறைக்கின்றனர்.

குடும்பம் மட்டுமில்லை ஒட்டு மொத்த ரசிகர்களும் கேட்கும் ஒரே கேள்வி “கடையை எப்ப சார் திறப்பீங்க”ன்னு தான். காரணம் இந்த கடை எபிசோடுவை வைத்து தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரும் அனைத்து சம்பவங்களும் நம் வீடுகளில் சின்ன சின்னதாக அரங்கேறும் நிகழ்வுகள் தான். சொல்ல போனால் தினமும் நாம் சந்திக்கும் காட்சிகளை அப்படியே கலர்ஃபுல்லாக மாற்றி டெலிகாஸ்ட் செய்தால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதனால் தான் இந்த சீரியலை ஃபேமலி ஆடியன்ஸ் அவ்வளவு விரும்பி பார்க்கின்றனர். அதே போல் அவர்கள் அந்த சீரியலுக்குள் சில நேரங்களில் மூழ்கியும் போய் விடுகின்றனர். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறந்த போது மொத்த சீரியல் ரசிகர்களும் அழுதனர். அவர்களை அறியாமல் பல சமயங்களில் இதுப்போல் யதார்த்தை மீறிய உணர்வு அவர்களுக்கு வந்து விடுகிறது.

அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனரின்திரைக்கதை பலமும், உயிரை கொடுத்து நடிக்கும் கலைஞர்களின் பங்களிப்பும் தான். அவர்கள் உயிரோட்டமாக நடிக்கும் போது தான் ரசிகர்கள் தங்களை மறந்து அந்த சீரியலுக்குள் நுழைந்து விடுகின்றனர். இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடை பிரச்சனை குறித்த எபிசோடு ஒளிப்பரப்பாகி வருகிறது. தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்த செல்ல நினைத்த மூர்த்தியும் அவரின் தம்பிகளும் சேர்ந்து குன்னக்குடியில் மிகப் பெரிய கடையை லோன் வாங்கி கட்டுகின்றனர். கடை திறப்புக்கு 2 நாள் முன்பு அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து விட்டு செல்கின்றனர்.

இதற்கு காரணம் யார்? என்பது நேற்று வரை தெரியாமல் புதிராகவே இருந்தது. அதே சமயம்உயர் அதிகாரிவேண்டுமென்றே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதையும் பார்க்க முடிந்தது. மொத்த குடும்பமும் செய்வதறியாமல் திகைத்து போயியுள்ளனர். ஜீவா, மீனா அப்பாவிடம் உதவி கேட்கிறார். ஆனால் அவர் செய்ய மறுக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவரது எண்ணம். இதற்கிடையில் உண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மூட யார் காரணம் என்பது தெரிந்து விட்டது.

கண்ணன் பிரச்சனையில், கதிர் சில ரவுடிகளை அடித்து சண்டை போட்டார். அந்த ரவுடிகளில் ஒருவரின் அப்பா தான் இந்த வேலையை செய்துள்ளார். இந்த உண்மையை அந்த ரவுடியே கண்ணனிடம் சொல்கிறான். இதனால் கண்ணனுக்கு மிகப் பெரிய ஷாக். அதே நேரம் இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் ஐஸ்வர்யாவிடம் மட்டும் சொல்லி வருத்தப்படுகிறார் கண்ணன். மூர்த்தி கோபப்படுவார் என கண்ணனும் ஐஸ்வர்யாவும் இந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் மறைக்கின்றனர்.

Related Posts

Leave a Comment