பாக்கியா கையில் ஜெனியின் குழந்தை… கோபத்தின் உச்சத்தில் ஈஸ்வரி

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. குறித்த ஆர்டரில் பல சொதப்பல்களும் அரங்கேறி வருகின்றது.

இந்நிலையில் செழியன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்த ஈஸ்வரியிடம் பாக்கியா திட்டமிட்டு குழந்தையை வாங்கியுள்ளார்.

பின்பு ஜெனிபரையும் அந்த இடத்திற்கு வரவழைத்து குழந்தையை அவரிடம் ஒப்படைத்துள்ளார். இதனால் ஈஸ்வரி கோபத்தின் உச்சத்தில் காணப்படுகின்றார். இனிவரும் காட்சியில் மாமியார் மருமகள் இடையே போர்களமாக காணப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment