பப்புவா நியூ கினியாவில் பயங்கரம்; 15 பேர் உயிரிழப்பு

by Lifestyle Editor

பப்புவா நியூ கினியாவின் இரு முக்கிய நகர்ங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் தலை நகர் மோர்ஸ்பி, மற்றும் லே ஆகிய இரு நகரங்களிலேயே குறித்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும்,மோர்ஸ்பி நகரில் 8 பேரும், லே நகரில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வன்முறைச் சம்பவங்களுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment