கிழக்கு வாசல் தொடரில் வெளியேற்றப்பட்ட சஞ்சீவ்- கமிட்டான புதிய சீரியல்

by Column Editor

கிழக்கு வாசல்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதிகம் சன் தொலைக்காட்சியில் தொடர்கள் தயாரித்து நடித்தும் வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். இரவு 9.30 மணிக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக இவர் தயாரித்து, நடிக்கும் சீரியல்கள் தான் ஒளிபரப்பாகி வந்தது.

ஆனால் இப்போது அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய் டிவி பக்கம் வந்துள்ளார் ராதிகா.

விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க கிழக்கு வாசல் என்ற தொடரை ராடான் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் மற்றும் ரேஷ்மா முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு ஓடிக் கொண்டிருக்கிறது.

நடிகர் சஞ்சீவ்

இந்த தொடரில் முதலில் நாயகனாக நடிக்க சஞ்சீவ் தான் கமிட்டானார். ஆனால் அவர் சில காரணங்களால் வெளியேறியிருந்தார். தற்போது அவரது புதிய சீரியல் குறித்து தான் தகவல் வந்துள்ளது.

சஞ்சீவ் மற்றும் தாலாட்டு சீரியல் புகழ் ஸ்ருதி நடிக்க சன் டிவியில் புதிய தொடர் வரப்போகிறதாம். இவர்களுடன் திருமதி செல்வம் சீரியல் புகழ் ரிந்தியாவும் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

Related Posts

Leave a Comment