சூர்யாவை கொல்ல வரும் அரவிந்த்… மாரி சீரியல் அப்டேட் ..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இன்றைய எபிசோடில் சூர்யா மாரிக்கு அக்கவுண்ட் ஓபன் பண்ண பேங்குக்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில் பேங்கில் சூர்யா மாரிக்காக தனி அக்கவுண்ட் ஓபன் பண்ணி அதில் மாரியை கையெழுத்து போட சொல்ல மாரி சூர்யா என பெயரை போட அதை பார்த்து சூர்யா பீல் பண்ணுகிறான்.

பின்பு அங்கிருந்து ஏடிஎம் சென்று ஏடிஎம் கார்டில் எப்படி பணம் எடுக்க வேண்டும், எப்படி பணம் போட வேண்டும் என்பதை சூர்யா மாரிக்கு சொல்லிக் கொடுக்க மாரி அதை கவனமுடன் கேட்டுக் கொள்கிறாள்.

அடுத்து தேவியின் தோழி ஜானகி பழைய டைரியை தேட அதை கருப்பு உருவம் ஒன்று மறைந்திருந்து பார்க்கிறது. ஜானகிக்கு அந்த டைரி கிடைக்க உடனே விக்ரமுக்கு போன் செய்து டைரி கிடைத்துவிட்டது என வர சொல்வது அப்போது கருப்பு உருவம் உள்ள எகிறி குதிக்க தேவியின் தோழி ஜானகி கருப்பு உருவத்தை பார்க்கிறாள்.

விக்ரம் வெளியே வண்டியை நிப்பாட்டி உள்ளே வந்து காலிங் பெல் அடிக்க யாரும் திறக்காமல் இருக்க ஜானகி ஜானகி என்று அழைத்து யாரும் வராமல் இருக்க விக்ரம் பின்பக்கமாக எகிறி குதித்து உள்ளே வர ஜானகி பெட்டில் படித்திருக்க சுற்றி மல்லிப்பூ தூவி இருக்கிறது. விக்ரம் அருகே வந்து ஜானகியை பார்க்க ஜானகி இறந்தது தெரிய வருகிறது.

விக்ரம் யார் செய்தார்கள் என்று சுத்தி முத்தி பார்க்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர். அடுத்து வீட்டிற்கு வந்ததும் சூர்யா மாரியிடம் பேங்க் பாஸ்புக் கொடுத்து வைத்துக்கொள்ள சொல்ல மாரி எனக்கு எதுக்கு ஹஸ்பன்ட் சார் என்று கேட்க நீ யாரை நம்பி இருக்க கூடாது என்ன கூட நம்பி இருக்க கூடாது என சொல்கிறான்.

இதுல உனக்கு பணம் போட்டு இருக்கேன், உனக்கு இல்ல உங்க அப்பா அம்மாவுக்கோ தேவை பட்டுச்சுன்னா இதை எடுத்து நீ செலவு பண்ணிக்க வேண்டும் என சொல்ல எனக்கு அதெல்லாம் வேண்டாம் சார் என்று சொல்ல நாளைக்கு எனக்கு ஏதாவது ஆச்சுன்னா என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் நீ யார் கையையும் எதிர்பார்த்து நிக்கக்கூடாது மாரி என்று சொல்ல உடனே மாரி பீல் ஆகி உங்களுக்கு அந்த மாதிரி எதுவுமே நான் ஆக விட மாட்டேன் சார் உங்க உங்க உயிரை பாதுகாக்க தான் தேவி அம்மா என்னை அனுப்பி இருக்காங்க என் உயிருக்கு அப்புறம் தான் உங்க உயிர் போகும் என்று சொல்கிறாள்.

அடுத்து சூர்யா மாரியின் சூட்கேஸில் வைத்து நீ எப்ப வேணுமோ எடுத்துக்கோ என்று சொல்கிறான். அடுத்து அரவிந்த் தாராவிடம் எப்ப தான் எனக்கு சொத்து கிடைக்கும் நீங்க சொத்தை விட்டுட்டு ஜாஸ்மின், சூரியா கல்யாணத்தை தான் நடத்த பாக்குறீங்க என்று சத்தம் போட தாரா அவசரப்படாமல் கொஞ்சம் அமைதியா இரு, நமக்கு இப்போ மாரி வீட்டை விட்டு வெளியே போகணும் அதுதான் முக்கியம் என்று சொல்ல கோபத்தில் அரவிந்த் ரூமை விட்டு வெளியே செல்கிறான்.

பின்னர் இரவு மாரி தூங்கிக் கொண்டிருக்க அவளுக்கு முன்னறிவிப்பு ஏற்படுகிறது. அதாவது சூர்யாவை யாரோ கத்தியால் குத்த வருவது போல தோன்ற மாரி அதிர்ச்சியாக பிறகு அரவிந்த் சூர்யாவை கத்தியால் குத்த வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment