தொடர்ந்து 7வது வர்த்தக தினமாக ஏறுமுகத்தில் பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்வு..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் தொடர்ந்து 7வது வர்த்தக தினமாக இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே பங்குச் சந்தைகளின் குறியீ்ட்டு எண்கள் புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த வங்கி மற்றும் எஸ்.பி.ஐ. உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,057 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,439 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 106 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.288.55 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.2.47 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.81 புள்ளிகள் உயர்ந்து 63,099.65 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 140.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,758.35 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment