இனியாவால் அசிங்கப்பட்டு நின்ற பாக்கியா!

by Lifestyle Editor

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் மிக விறு விறுப்பாக செல்லும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடிக்கிறது.

இந்த சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே மனைவிக்கு தெரியாமல் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கதை சென்றுக் கொண்டிருந்தது.

இதற்கு ஒரு திருப்பு முனை ஏற்படுத்தும் வகையில், கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது.

இவர்களின் திருமணம் தொடர்பான கதைகள் எழும் பொழுது தான் இந்த சீரியல் விறுவிறுப்பாக செல்ல ஆரம்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து பாக்கியாவை விட்டு கோபி, ராதிகாவுடன் எதிர் எதிர் வீடுகளில் இருக்கையில், இவர்களுடன் இனியாவும் கோபியின் அப்பாவும் ராதிகாவுடன் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

பாக்கியவை அவமானப்படுத்திய கோபி

இந்நிலையில் பாக்கியா இனியாவை பார்க்க பல முயற்சிகள் எடுத்தாலும் கோபி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் கடும் கோபமுற்று ராதிகாவின் வீட்டிற்கே சென்று இனியாவை கூப்பிட்ட போது, கோபி அறைக்குள் வைத்து இனியாவை பூட்டிவிட்டு சாவியை தர மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து “இனியாவை பார்க்க முடியாது மானம், ரோசம் இருந்தால் வராத, நீ போலன்னா கழுத்த பிடித்து வெளியே தள்ளுவேன்” என்று கடுமையான வார்த்தைகளால் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment