செந்திலின் வேட்டியை உருவி அசிங்கப்படுத்திய பழனி ..

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இன்றைய எபிசோடில் தத்துகொடுக்கும் சடங்கு நடைபெற அதில் கணவன் மனைவியாக அமுதா செந்தில் மாலை மாற்றும் சடங்குகள் செய்கின்றனர். பின்னர் நதியாவிடம் செந்தில் அமுதாவை பற்றியும் தங்கள் காதல் வாழக்கையை பற்றியும் சொல்ல அதில் அமுதா தான் செய்த தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்ல, அதை அமுதா கேட்கிறாள்.

ஐயர் நதியாவுக்காக தத்துவாங்கிய அப்பா அம்மா வேண்டிக்கொண்டு கோவில் மணியடிக்க வேண்டும் என சொல்ல மணி உயரத்தில் கட்டியிருப்பதால் அமுதாவை செந்தில் தூக்க வேண்டும் என சொல்ல, வேறு வழியில்லாமல் செந்தில் தூக்க அமுதா மணியை அடிக்கிறாள். அவளை கீழே இறக்கும் போது தடுமாறி விழப்போக அவளை கட்டிப்பிடிக்கிறான் அதை அப்போது கோவிலுக்கு வரும் சிதம்பரம் பார்த்து கோபமாகிறார்.

உமா பழனி செந்திலை பற்றி தவறாக சிதம்பரத்திடம் ஏற்றி விட சிதம்பரம் இன்னும் கோபமாகிறார். சிதம்பரம் சாமி கும்பிட வரும் இடத்திற்கு செந்தில் எதார்த்தமாக வர அவன் மேல் கோபம் கொள்ளும் சிதம்பரம் அவனை அடித்து தள்ள, பழனி அவன் வேஷ்டியை காலால் அமுக்கி கொள்ள செந்திலின் வேஷ்டி அவிழ்ந்து விடுகிறது.

இதனால் செந்தில் அவமானப்பட்டு நிற்க அதை அமுதா பார்த்து விடுகிறாள். இதனால் அமுதா கோபத்துடன் வந்து சிதம்பரத்திடம் செந்திலுக்காக சப்போர்ட் பண்ணி கோபமாக பேச அமுதா கையில் இருக்கும் வேஷ்டியை பறித்து செந்திலுக்கு கொடுக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? செந்திலுக்காக சப்போர்ட் செய்த அமுதா இனி அவனை ஏற்றுக்கொள்வானா என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Related Posts

Leave a Comment