இனி சிவா, சஹானா நிலை என்னவாகும்..? ‘இதயத்தை திருடாதே 2’ சீரியலில் காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்!

by Column Editor

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே சீசன் 2’ சீரியலில் சன் தொலைக்காட்சிகளில் அதிக தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான முக்கிய நடிகரை களமிறக்க உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார்.

சன் டி.வி. விஜய் டி.வி.க்கு போட்டியாக கலர்ஸ் தொலைக்காட்சியும் பலவிதமான சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது. தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளது. இதயத்தை திருடாதே சீசன் 2, அம்மன் சீசன் 3 என அடுத்தடுத்த பாகங்களை ஒளிபரப்பும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாப் சேனல்களுக்கு டப் கொடுக்கும் விதமாக சீரியலின் கதைக்களம் மட்டும் இருந்தால் போதாது, கதையில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்க வேண்டும். எனவே அதனைக் கருத்தில் கொண்டு சன் டி.வி. மற்றும் விஜய் டி.வியில் முன்னணியில் உள்ள நடிகர், நடிகைகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தட்டித்தூக்கி வருகிறது.

அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே சீசன் 2’ சீரியலில் சன் தொலைக்காட்சிகளில் அதிக தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான முக்கிய நடிகரை களமிறக்க உள்ளது. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை ஹிமா பிந்து, சஹானா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். நடிகர் நவீன் குமார், சிவா என்ற கேரக்டரில் நடிக்கிறார். முதல் சீசனில் சிவா, சஹானா இடையிலான கல்யாணம், காதல் ஒளிபரப்பான நிலையில், தற்போது இரண்டாவது சீசனில் 6 வருடங்களுக்கு பிறகு ஆரம்பிப்பது போல் ஒளிபரப்பாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுப்புலட்சுமி ரங்கன், சமீபத்தில் இதயத்தை திருடாதே சீசன் 2 சீரியலில் அருனா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். தற்போது அருணாவின் தந்தையாக ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நேத்ரன் நடிக்க உள்ளார்.

கதைக்களத்தின்படி, அருணா சிவாவின் இடத்திற்குச் சென்று, அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மக்களை அச்சுறுத்துகிறார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அருணாவை தாக்கிவிடுகின்றனர். இதனால் படுகாயம் அடைந்த அருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்தை ராமச்சந்திரன் அங்கு வர உள்ளார். மகளை பார்ப்பதோடு, அவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட காரணமான சஹானாவிற்கு, சிவாவிற்கும் புத்தி புகட்ட வில்லத்தனமான திட்டங்களுடன் காய் நகர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில், சஹானாவின் தந்தையிடம், அருணாவை உங்கள் மாப்பிள்ளையும், ஏரியா ஜனங்களும் சேர்ந்து அடிச்சிட்டாங்க. உங்களுக்கு எல்லாம் அந்த ராஜலட்சுமியைத் தான் தெரியும். அவங்க புருஷன் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?. அவர் சிவா, சஹானாவை சும்மாவே விடமாட்டாரு என கெத்தாக நேத்ரன் இன்ட்ரோ கொடுக்கப்பட்டுள்ளது, இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment