இந்த உணவுகளை மீண்டும் சூடு படுத்தாதீங்க! விஷமாக மாறும் ஜாக்கிரதை…!

by Column Editor

வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.

முட்டை:

முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரத சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

சாதம்:

பழைய சாதத்தை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. சமைக்காத அரிசியில் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை உணவில் விஷத்தன்மையை கலக்கும் இயல்புடையவை. மீண்டும் சுடவைக்கப்பட்டால் இந்த பாக்டீரியாக்கள்அவை பன்மடங்காகப் பெருகின்றன.

பழைய கீரை:

பழைய கீரையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து, அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறி எனலாம். அத்தகைய சூழ்நிலையில், உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டு சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுவதோடு, இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.

சிக்கன்:

பழைய சிக்கன் உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதிக புரதச்சத்து இருப்பதால், சிக்கனை மீண்டும் சூடாக்குவது பல செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

Related Posts

Leave a Comment