பாக்கியாவை ஏமாற்றிய கோபி… கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்த ஈஸ்வரி அம்மா!

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருவிளையாடல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியாவின் சமையல் ஆர்டரை நிறுத்த கோபி ஆடும் நாடகம் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் திருட்டுதனம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. கோபி குறித்த காட்சிகளை ரசிகர்கள் திட்டிக் கொண்டே அதிகம் விரும்பி பார்ப்பதால் இயக்குனர் இதை அதிகமாக சீரியலில் யூஸ் செய்கிறார். அந்த வகையில் இன்றைய எபிசோடை பார்ப்பவர்கள் கோபியை திட்டாமல் நாடகத்தை பார்த்து முடிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரே நேரத்தில் 2 பெண்களை அந்நியாயமாக ஏமாற்றுகிறார் கோபி. கல்யாண ஆர்டர் ஒன்றை பாக்கியா எடுத்து இருக்கும் விஷயம் கோபிக்கு நன்கு தெரியும். அதை எப்படியாவது சொதப்ப வேண்டும் என நினைத்த கோபி உடம்பு சரியில்லாத போல் நாடகமாடுகிறார். இதை நம்பி பாக்கியா கோபிக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறார்.

இப்படி இருக்கையில் ஒருபக்கம் செல்வி அக்கா, பாக்கியாவுக்கு ஃபோன் செய்து கொண்டிருக்க கோபிக்கு எல்லாம் தெரிந்தும் உண்மையிலே உடம்பு சரியில்லாதது போலவே நடிக்கிறார். பாக்கியா நான் கிளம்புகிறேன் என கோபியிடம் பர்மிஷன் கேட்க, மறுபடியும் நாடகத்தை தொடங்குகிறார் கோபி. ஆனால் இந்த முறை கோபி எவ்வளவு நடித்தும் பலனில்லை. பாக்கியா வேலை தான் முக்கியம் என கிளம்பி விடுகிறார். அந்த நேரம் பார்த்து, கோபியின் அம்மா ஈஸ்வரி அம்மா வந்து, கோபியை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ வேலைக்கு கிளம்பு என சப்போர்ட் செய்கிறார்.

எப்போதுமே கோபிக்கு எது நடந்தாலும் பாக்கியா கூடவே இருந்து நீ பார்த்துக் கொள் என்று சொல்லும் ஈஸ்வரி அம்மாவே இன்று பாக்கியாவுக்கு ஆதரவாக நிற்கிறார். இதைப்பார்த்து பாக்கியாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவசர அவசரமாக கிளம்பி போய் கல்யாண சமையலை கவனிக்கிறார் பாக்கியா. ஆனால் கோபி, ராதிகாவுக்கு ஃபோன் செய்து நடிக்க ஆரம்பிக்கிறார். தனக்கு உடம்பு சரியில்லை பார்த்துக் கொள்ளவும் வீட்டில் ஆள் இல்லை என பொய் சொல்லி, சிம்பத்தி ஓட்டு வாங்க முயற்சி செய்கிறார். உடனே ராதிகா கோபியை வீட்டுக்கு வரும்படி கூப்பிடுகிறார்.

இங்கு பாக்கியா சமையல் வேலைகளை பார்க்க, கோபியோ ராதிகா வீட்டுக்கு போய் பாக்கியாவை பற்றி தப்பு தப்பாக குறை சொல்லி ராதிகா வீட்டில் தங்குகிறார். ராதிகாவும் இதை எல்லா நம்பி கோபியை பாசமாக கவனித்துக் கொள்கிறார். ஆக மொத்தத்தில் கோபியின் திருவிளையாடல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

Related Posts

Leave a Comment