கல்யாணத்திற்கு முன்பே மாட்ட போகும் கோபி! பாக்கியலட்சுமி சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் இதுதானா?

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில்கோபி பாக்கியாவிடம் மாட்டிக் கொள்வது போல் ஒரு ட்விஸ்ட்டை இயக்குனர் சீரியலில் வைக்க உள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ட்விஸ்டாக கோபியின் நிஜ முகம் பாக்கியாவுக்கு தெரிய வரும் நேரம் வந்து விட்டது. வரும் வாரத்தில் இந்த சீரியலில் முக்கிய திருப்பம் நிகழ இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. வரும் வாரத்தில் கோபி , பாக்கியாவிடம் மாட்டிக் கொள்வது போல் ட்விஸ்ட் வைக்க இயக்குனர் பிளான் செய்து இருக்கிறார் போல.

பாக்கியலட்சுமி சீரியலில். கோபி மாட்ட வேண்டும் என ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீப காலமாக கோபியின் நடவடிகையில் மாற்றம் இருப்பதை எழில், ஈஸ்வரி அம்மா, ஜெனி, செல்வி அக்கா ஆகியோர் கவனித்து வருகின்றனர்,. ஆனால் பாக்கியாவின் கண்ணுக்கு மட்டும் அது தெரிவதில்லை. இவ்வளவு நாட்களாக கோபி தப்பே செய்தாலும் தலையில் தூக்கி வைத்து கொண்டிருந்த கோபியின் அம்மா ஈஸ்வரியே, தனது மகன் இப்படிதானா? என ஒரு கனம் நினைக்க வைத்து விட்டார் கோபி. காரணம் பணப்பிரச்சனையில் கோபியின் நடவடிக்கை, எழிலும் செழியனும் அடித்துக் கொண்டது அவருக்கு மிகுந்த கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் ஊருக்கு செல்லலாம் என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார். ஆனால் கோபியின் அப்பா ராமமூர்த்தி தான் பாக்கியாவுக்காக இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் என அடம் பிடிக்கிறார்.

மனைவியை கொஞ்சம் கூட மதிக்காத கணவர் கோபி, குடும்பத்திற்கு தெரியாமல் தனது பழைய காதலியுடன் மிகவும் நெருங்கி பழகி வருவது அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இப்படி இருக்கையில் கோபி, ராதிகாவுடன் திருமணத்திற்கு தயாராகி விட்டார். வரும் நாட்களில் கோபி – ராதிகா திருமண எபிசோடுகள் ஒளிப்பரப்பாகவுள்ளன. போன வாரம், பாக்கியாவை ஏமாற்றி டைவர்ஸ் வழக்குக்காக கோர்ட் வரை அழைத்து சென்று விட்டார். ஆனால் இந்த உண்மை வீட்டில் இருக்கும் யாருக்கும் தெரியாது.

இன்றைய எபிசோடில், ராதிகா வீட்டிலே கோபி இரவு தங்கி விடுகிறார். காலையில் தான் வீடு வந்து சேர்கிறார். இரவு முழுவதும் கோபி வராமல் போனதை நினைத்து பாக்கியா வேதனை படுகிறார். அதுமட்டுமில்லை எழிலிடம் சொல்லி வருத்தமும் படுகிறார். இப்படி இருக்கையில், கோபி மொத்த குடும்பத்தையும் மறந்து விட்டு ராதிகாவுடன் இருக்கவே தயாராகி விட்டார். டைவர்ஸ் கிடைத்த உடனே கிளம்பி விடலாம் என்ற பிளானில் தான் சுற்றி வருகிறார்.

இந்நிலையில் வரும் வாரத்தில் கோபி பாக்கியாவிடம் மாட்டிக் கொள்வது போல் ஒரு ட்விஸ்ட்டை இயக்குனர் சீரியலில் வைக்க உள்ளார். அதாவது, கோபி ராதிகா வீட்டில் இருக்கும் போது யதார்த்தமாக பாக்கியாவும் செல்வி அக்காவும் அங்கு வருகிறார்கள். அவர்கள் காலிங் பெல்லை அடிக்க, அந்த கதவை கோபி தான் திறக்கிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் முடிவில் வரும் வாரத்தில் என புரமோவுடன் காட்டப்படுகின்றன. ஒருவேளை இது கோபியின் கனவாக இருக்கவும் வாய்ப்புண்டு. இல்லை என்றால் வழக்கம் போல் கோபி தகிடுதத்தம் செய்து எஸ்கேப் ஆகவும் வாய்ப்புண்டு. என்ன நடக்கும் ? என்பது வரும் வாரத்தில் தான் தெரிய வரும்.

Related Posts

Leave a Comment