அடடா முத்து பிரச்சனை பண்ணுவாருனு பார்த்தா.. விஜயா முத்திக்கொண்டாரே?

by Lifestyle Editor

விஜய் டிவியில், டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்து வரும் சீரியல் ‘சிறகடிக்க ஆசை’. கடந்த ஒன்றரை வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், 350 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெற்றி வசந்த் கதாநாயகனாக நடிக்க, கோமதி பிரியா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர் சுந்தர்ராஜன், அணிலா ஸ்ரீகுமார், பாக்கியலட்சுமி, தமிழ்ச்செல்வி, ஸ்ரீ தீபா, ப்ரீத்தா ரெட்டி, திவாகர், சங்கீதா, உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், ஸ்ருதிக்கும், ரோகிணிக்கும், ஒரே நாளில் தாலி பிரித்து கோர்க்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் ரோகிணி தன்னை பற்றிய உண்மை வெளியே வந்து விட கூடாது என்பதில் குறியாக இருப்பதால், முத்துவை குடிக்க வைத்து ஏதேனும் பிரச்சனையை வெடிக்க வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.

அதைப்போல் ஸ்ருதியின் அப்பா – அம்மாவும் ஏதாவது பிரச்சனையை இந்த பங்க்ஷனில் உண்டு பண்ணி, தன்னுடைய மகள் – மருமகனை தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சென்று விட வேண்டும் என திட்டம் போடுகின்றனர். அதே நேரம், மீனா… முத்துவால் எந்த ஒரு பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

முத்துவிடம் இந்த இடத்தை விட்டு எங்கேயும் போகக்கூடாது என்று கண்டீஷன் போட்டு… அவருடனே அமர்ந்துள்ளார். எனவே முத்துவால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? அல்லது பிரச்சனை செய்ய துடித்து கொண்டிருப்பவர்களே… வேறு ஏதாவது பிரச்சனையில் சிக்குவார்களா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் கேரளா முறைப்படி ஸ்ருதி உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து ஃபங்ஷனுக்கு தயாராகிறார்.

இதை பார்த்து ரோகினியின் தோழி அங்க, ஸ்ருதி கேரள முறைப்படி நிறைய நகை எல்லாம் போட்டுட்டு இருக்காங்க. நீ போட்டிருக்க நகையை பார்த்துட்டு உன் மாமியார்… உன்னை ஏதாவது கேட்க போறாங்க என சொல்ல, நான் தயார் செய்த ஆள் வந்து விட்டாரா? எப்படியாவது அவன் முத்துவை குடிக்க வைக்கணும் என்று சொல்லி, தன்னுடைய பிளானை ஒர்க்அவுட் செய்ய பார்க்கிறார்.

இது ஒரு புறம் இருக்க மாலையால் புது பிரச்சனை ஒன்று விஜயா மற்றும் ஸ்ருதியின் அம்மாவுக்கு இடையே ஏற்படுகிறது. கேரள முறைப்படி துளசி மாலையை தான் ஸ்ருதி போட வேண்டும் என அவருடைய அம்மா சொல்ல, விஜயாவோ தங்களுடைய குடும்ப முறைப்படி ரோஜா மாலையை தான் போட வேண்டும் என சொல்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அங்கு வரும் ஸ்ருதி இது என்னுடைய பங்க்ஷன் தானே, எனக்கு பிடிச்ச மாதிரி நான் எந்த மாலை வேணாலும் போட்டுக்குவேன் என கூறி இரண்டு மாலையும் தன்னுடைய கழுத்தில் போட்டுக் கொள்கிறார். இப்படியான நிலையில் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது. இன்றைய தினம் என்னென்ன கலவரம் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts

Leave a Comment