பாக்கியலட்சுமி சீரியலில் வெளியேறியது குறித்து முதன்முறையாக பதிவு போட்ட ஆர்யன்

by Column Editor

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் செம ஹிட். ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு தொடங்கிய இந்த தொடர் இப்போது டிராக் மாறுகிறதோ என்பது ரசிகர்களின் வருத்தம்.நிறைய சண்டைகள், அழுகை தான் தொடரில் அதிகம் வந்துகொண்டிருக்கின்றன.

பாக்கியலட்சுமி புதிய செழியன்:

இதில் முதன்முறையாக கதாபாத்திர மாற்றமும் நடந்துள்ளது, செழியன் வேடத்தில் நடித்துவந்த ஆர்யன் தொடரில் இருந்து வெளியேறிவிட்டார். ஆர்யனுக்கு பதிலாக விகாஷ் சம்பத் என்பவர் புதிய செழியனாக நடிக்க தொடங்கியுள்ளார்.புதிய செழியன் இடம்பெறும் காட்சிகள் நேற்றில் இருந்து ஒளிபரப்பாகியுள்ளது, அவருக்கு ரசிகர்கள் அதிகம் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

ஆர்யன் போட்ட பதிவு:

சீரியலில் இருந்து வெளியேறிய செழியன் இதுவரை அதுகுறித்து எதுவும் கூறியது இல்லை. தற்போது முதன்முறையாக சீரியல் குறித்து ஒரு பதிவு போட்டுள்ளார் ஆர்யன்.அதில் எனக்கு இதுநாள் வரை செழியன் வேடத்திற்கு கொடுத்த அன்புக்கு நன்றி, அதேபோல் புதிய செழியனாக வந்திருக்கும் விகாஷ் அவர்களுக்கும் கொடுங்கள் நன்றி என பதிவு செய்துள்ளார்.

Related Posts

Leave a Comment