வருண் – சத்யாவை பிரிக்க நினைக்கும் ஸ்ருதி.. அந்த உண்மையை கண்டுப்பிடித்துவிட்டார்!

by Column Editor

மெளன ராகம் சீரியலின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மௌன ராகம் 2 சீரியல் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது.

மெளன ராகம் 2 சீரியலில் தருண் – சத்யாவை பிரிக்கும் வில்லியாக மாறிவிட்டார் ஸ்ருதி. இன்றைய எபிசோடில் சத்யாவுக்கு எதிராக சவால் விட்டு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மெளன ராகம் சீரியலின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து மௌன ராகம் 2 சீரியல் தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. பரபரப்பான கதைக்களத்துடன் செல்லும் இந்த தொடருக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.முதல் பாகத்தில் அப்பாவான கார்த்திக் கிருஷ்ணாவின் பாசத்திற்காக சக்தி ஏங்கி கொண்டிருந்தார். ஆனால் ஒருநாள் எல்லா உண்மைகளும் தெரிய வர, சக்தியும் மல்லிகாவும் கார்த்திக் கிருஷ்ணாவை பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது 2வது பாகத்தில் குழந்தைகளான ஸ்ருதி, சத்யா வளர்ந்து விட்டனர்.

ஆரம்பத்தில் இந்த சீரியலின் கதைக்களம் வேற மாதிரி இருந்த நிலையில், வருண் – சத்யா திருமணத்திற்கு பிறகு டோட்டலாக சீரியலின் ரூட்டே மாறியது. இவர்கள் இருவருக்கும் இடையில் அரங்கேறும் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் படு வைரல். விஜய் டிவி சீரியல்கள் லிஸ்டில் அதிக பொருள் செலவுடன் எடுக்கப்பட்டு வரும் மெளன ராகம் சீரியல் டி.ஆர்.பியிலும் நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இந்நிலையில், சத்யா வருணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் லைஃப் சந்தோஷமாக சென்று கொண்டிருக்க, ஸ்ருதி தருணை மிரட்டி திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வருகிறார். மொத்த குடும்பமும் சத்யாவை கொண்டாடுவது ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை. அதே போல், கார்த்திக் கிருஷ்ணா சத்யா மீது காட்டும் பாசம் ஸ்ருதிக்கு சந்தேகத்தை வர வைக்கிறது. இப்படி இருக்கையில் சத்யா மல்லிகாவின் மகள் தான் என்பதை போன வாரம் ஸ்ருதி கண்டுப்பிடித்து விட்டார். மறுபடியும் சத்யா தனது வாழ்க்கையில் வந்து விட்டதாக கூறி அவரை வீட்டை விட்டு விரட்ட முடிவு எடுக்கிறார்.

மியூசிக் ஸ்கூல் ஒப்பனிங் அன்று, தருணை மிரட்டி அந்த ஸ்கூலை சத்யாவுக்கு தரவிடாமல் செய்தார். மொத்த குடும்பமும் தருண் மீது கோபத்தில் இருக்கின்றனர். தருணின் மாமா இதை மன்னிக்க மாட்டேன் என்கிறார். இப்படி இருக்கையில், இன்றைய எபிசோடில் வருண் கோபத்தில் இருக்க, சத்யா அவரை சமாதானம் செய்கிறார். ஸ்ருதிக்கு தருணின் அம்மா சப்போர்ட் செய்கிறார். இந்நிலையில்,சத்யாவை கூப்பிட்டு ஸ்ருதியும் தருணின் அம்மாவும் வெறுப்பு ஏற்றுகிறார்கள். ஆனால் சத்யா அதை பெருசாக கண்டுக் கொள்ளவில்லை கோபத்தில் ஸ்ருதி, மொத்த உண்மையையும் போட்டு உடைக்கிறார்.

மியூசிக் ஸ்கூல் விஷயத்தில் என்ன நடந்தது என்பதை கூறி ஷாக் தருகிறார். சத்யா அதிர்ச்சியில் நிற்க, வருணை உன்னையும் பிரித்து காட்டுகிறேன் என்கிறார். உடனே சத்யாவுக்கு சந்தேகம் வருகிறது. ஸ்ருதிக்கு, மல்லிகா – சத்யா பற்றி உண்மை தெரிந்து இருக்குமோ என யோசிக்கிறார். ஆனால் ஸ்ருதிக்கு ஏற்கெனவே எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்ற ரகசியம் சத்யாவுக்கு தெரியாது.

Related Posts

Leave a Comment