பாக்கியாவிடம் உண்மையை சொல்லும் கோபி அப்பா.. பாக்கியலட்சுமியில் அடுத்த ட்விஸ்ட்!

by Column Editor

கோபியின் அப்பா, பாக்கியாவை கோர்டுக்கு போக வேண்டாம் என தடுக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் அப்பா, கோபி ராதிகா குறித்த உண்மையை சொல்லி பாக்கியாவை கோர்டுக்கு செல்ல விடாமல் தடுக்கிறார். ஆனால் அதற்குள் கோபி மொத்த ஆட்டத்தையும் கலைத்து விடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலின் கோர்ட் எபிசோடுக்காக தான் மொத்த சீரியல் ரசிகர்களும் வெயிட்டிங். மனைவியை கோபி அந்நியாயத்திற்கு ஏமாற்றுவது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதுதானே சீரியலின் வெற்றி என்பது போல் இயக்குனர் படு சுறுசுறுப்பாக சீரியலை கொண்டு போகிறார். இப்படியும் அப்பாவியாக யாராவது இருப்பார்களா? என கேட்க வைக்கிறது பாக்கியாவின் கதாபாத்திரம். அதுமட்டுமில்லை கணவர் சொல்வதே வேத மந்திரம் என நினைக்கும் பாக்கியாவைஇப்படி ஏமாற்றுகிறாரே கோபி என ஒருபக்கம் ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.

இன்றைய எபிசோடில் முக்கியமான பல நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. பாக்கியாவிடம் கோர்டுக்கு செல்ல தயாராக சொன்ன கோபி, மிட் நைட் ராதிகா வீட்டுக்கு செல்கிறார். அங்கே போய் ராதிகாவுடன் காதல் வார்த்தைகளை பேசிவிட்டு இரவு அங்கேயே தங்கியும் விடுகிறார். இங்கு பாக்கியா அவசர அவசரமாக கோர்டுக்கு செல்ல தயாராகி கொண்டிருக்கிறார். ஜெனியும், எழிலும் பாக்கியாவிடம் கோர்டுக்கு செல்வது பற்றி விசாரிக்கின்றனர். கோபி மீது ஏற்கெனவே எழிலுக்கு சந்தேகம் இருப்பதால் கோர்டுக்கு எதுக்கு என்று துருவி துருவி கேட்கிறார். ஆனால் பாக்கியா ஏதோ ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார்.

வீட்டுக்கு வரும் கோபி பாக்கியாவை பார்த்து ஷாக் ஆகுகிறார். காரணம், டைவர்ஸ் வாங்க போவது கூட தெரியாமல் பூ எல்லாம் வைத்து கோயிலுக்கு செல்வது போல் நிற்கிறார் பாக்கியா. இதைப்பார்த்து கோபிக்கு குற்றணர்ச்சி வருகிறது. அடுத்த காட்சி தான் சீரியலின் முக்கியமான ட்விஸ்ட்.

பாக்கியா, கோபியின் அப்பா ராமமூர்த்தியிடம் போய் கோர்டு போவதை பற்றி சொல்கிறார். உடனே அவருக்கு கோபி மீது சந்தேகம் வந்து விடுகிறது. உடனே பாக்கியாவை கோர்டுக்கு போக வேண்டாம் என தடுக்கிறார். கண்டிப்பாக கோபி ஏதோ ஒரு திருட்டுதனம் செய்ய தான் பாக்கியாவை கோர்டுக்கு அழைத்து செல்கிறார் என்பது அவருக்கு நன்கு தெரிகிறது. ஆனால் கடைசியில் பாக்கியா அவர் பேச்சையும் கேட்காமல் கோர்டுக்கு போய் விடுகிறார். அடுத்து என்ன என்பது நாளைய எபிசோடில் தெரிய வரும்.

Related Posts

Leave a Comment