கழுதை கெட்டால் குட்டி சுவரு.. மீண்டும் வெண்பாவுடன் நெருக்கமாக டாக்டர் பாரதி!

by Column Editor

வெண்பா தற்கொலை முயற்சி டிராமாவை அரங்கேற்ற, அதை நம்பி ஓடி வந்த பாரதி கடைசியில் தப்பு எல்லாவற்றையும் மறந்து வெண்பாவை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் மீண்டும் பாரதியும் வெண்பா சேர்ந்த எபிசோடு ரசிகர்களை செம்ம கடுப்பாக்கியுள்ளது. கிட்டத்தட்ட சீரியல் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சென்று விட்டது.

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் டாப் 10 சீரியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலை பார்க்க தனி பெண்கள் கூட்டமே இருக்கிறது. காரணம் இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லை இந்த சீரியல் நாயகி கண்ணம்மாவை அவரின் கணவர் டாக்டர் பாரதி சந்தேகப்பட்டு வெளியே துரத்தி விடுவார். தன்னம்பிக்கை விடாமுயற்சியால் தனியாக குழந்தையை வளர்த்து சிகரம் தொடுகிறார் கண்ணம்மா.அதே நேரம் பாரதி கண்ணம்மா சீரியலின் ஹீரோவான டாக்டர் பாரதி கதாபாத்திரத்தை திட்டி தீர்க்காத ரசிகர்களே இல்லை எனலாம். கண்ணம்மாவை சந்தேகப்பட்டதில் இருந்து, அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியது, வில்லி வெண்பாவை நம்புவது, அவருக்கு துணையாக செல்வது என பாரதியின் எல்லா முடிவுகளையும் சீரியல் ரசிகர்கள் திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

சீரியலின் ஹிரோவே பாரதி தான் என்றாலும் கண்ணம்மாவுக்கு எதிராக செயல்படும் போது அந்த கேரக்டரையே ரசிகர்கள் திட்ட தயாரகி விடுக்கின்றனர்.

இதுவும் இந்த சீரியலின் வெற்றிக்கு ஒருவித காரணம் தான். ஆனால் இதே வாலை பிடித்து கொண்டு இயக்குனர் தொங்கினால் ரசிகர்களுக்கு கோபம் வரும் தானே. வில்லி வெண்பா செய்த சதியால் தான் இத்தனை வருடங்களாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து இருக்கிறார்கள். வெண்பா கூடவே இருக்கும் பாரதிக்கு, வெண்பா வில்லி என்பது கூட தெரியாது. சமீபத்தில் தான் அஞ்சலி விஷயத்தில் வெண்பா செய்த தவறு பாரதிக்கு தெரிய வர, அவரை பிரிந்து பேசாமல் இருந்தார்.

அந்த கேப்பில் தான் கண்ணம்மாவுடன்6 மாச கோர்டு உத்தரவுக்காக வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் வெண்பாவுடன் பாரதி சேர்ந்து விட்டார். பாரதியை பேச வைக்க, வெண்பா தற்கொலை முயற்சி டிராமாவை அரங்கேற்ற, அதை நம்பி ஓடி வந்த பாரதி கடைசியில் தப்பு எல்லாவற்றையும் மறந்து வெண்பாவை மன்னித்து ஏற்றுக் கொண்டார். இதனால் ரசிகர்கள் கடுப்பில் மறுபடியும் முதல்ல இருந்தா? என்ற ஷாக்கில் உள்ளனர்.

அதுமட்டுமில்லை இன்றைய எபிசோடில் பாரதியை வீட்டுக்கு கூபிடுகிறார். பாரதியும் வர சம்மதிக்கிறார். வெண்பாவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. கழுதை கெட்டால் குட்டி சுவரு கதை போல் மீண்டும் வெண்பா வீட்டில் டேரா போட பாரதி தயார் ஆகிவிட்டார்.

Related Posts

Leave a Comment