ஒரே நேரத்தில் பாக்கியா மற்றும் ராதிகாவுடன் கோபி.. ஷாக்கான ஆடியன்ஸ்!

by Column Editor

பாக்கியலட்சுமி கோபி வீட்டில் மாட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.

பாக்கியலட்சுமி சீரியல் கோபி, ஒரே நேரத்தில் பாக்கியா மற்றும் ராதிகாவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் இதுவரை இவர்கள் 3 பேரும் ஒன்றாக சந்தித்ததே இல்லை, ஒருவேளை அப்படி சந்தித்தால் கோபி மாட்டிக் கொள்வார். அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதால் இவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் நீண்ட நாள் காதலர்களான கோபியும் ராதிகாவும் சின்னத்திரையில் டாப் ஜோடிகளை மிஞ்சி விட்டார்கள் என்று கூட சொல்லலாம். இப்போது ஜெட் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் திருமணத்திற்கு பிறகும் காதலை தொடரும் கோபி – ராதிகா கதாபாத்திரத்தால் சீரியல் டி. ஆர்.பி எகிறி கொண்டிருக்கிறது. கோபி – ராதிகா திருமண எபிசோடுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங். சில தினங்களுக்கு முன்பு மணக்கோலத்தில் பாக்கியலட்சுமிஷூட்டிங் ஸ்பாட்டில் கோபி இருந்த புகைப்படம் வைரலானது.

சீரியல் ரசிகர்கள், கோபி – ராதிகா திருமணம் நடைபெறுவதற்குள் கோபி 2 பேரிடமும் மாட்டிக் கொள்ள வேண்டும் என புலம்பி தீர்த்தனர். சமீபத்தில் இந்த சீரியலில் பாக்கியாவின் கடைசி மகனாக நடிக்கும் வீஜே விஷாலை சுற்றி வளைத்த ரசிகர்கள் கூட்டம், பாக்கியா பாவம், கோபி அம்மாவை ஏமாற்றுக்கிறார் என அழுது தீர்த்தனர். அது ஒரு சீரியல் என்பதையே மறந்து அவர்கள் அந்த சீரியலுக்குள் மூழ்கி இருப்பது அந்த மொத்த சீரியல் குழுவுக்கே ஆச்சரியத்தை தந்தது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில்

இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் இருக்கிறது பாக்கியலட்சுமி தொடர்.

இதில் பாக்கியாவை ஏமாற்றும் கணவர் வேடத்தில் கோபியாக நடிகர் சதீஷ் நடிக்கிறார். அதே போல் இவரின் முன்னாள் காதலியாக ராதிகா ரோலில் பிக் பாஸ் புகழ் ரேஷ்மா நடித்து வருகிறார். திருட்டு தனம் செய்வது, குடும்பத்தை ஏமாற்றுவது, மாட்டிக் கொள்ளாமல் எஸ்கேப் ஆவது என கோபியின் தகிடுதத்தம் சீரியலில் அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் அரங்கேறும் ட்விஸ்டும், விறுவிறுப்பான கதையும் ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளது. முக்கியமாக பாக்கியாவுக்கு அடுத்தபடியாக கோபி கதாபாத்திரம் இந்த சீரியலின் மிகப் பெரிய தூண்.

கோபி வீட்டில் மாட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்காத ரசிகர்களே இல்லை எனலாம். ஆனால் கடைசி நேரத்தில் ஏதாவது திருட்டு வேலை செய்து கோபி தப்பித்து விடுவார். இப்படி தான் இத்தனை நாள் வரை சீரியல் சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில்சீரியலில் இதுவரை இவர்கள் 3 பேரையும் ஒன்றாக பார்த்து இருக்க முடியாது. கதைப்படி பாக்கியாவின் கணவர் கோபி என்பது ராதிகாவுக்கு தெரியாது. ராதிகாவின் காதலன் கோபி என்பது பாக்கியாவுக்கு தெரியாது. ஆனால் அனைத்து உண்மைகளும் தெரிந்த ஒரே நபர் கோபி தான்.

இந்த நிலையில்தான் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் கோபி, ராதிகா மற்றும் பாக்கியாவுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படம் சீரியல் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

Related Posts

Leave a Comment