ஒருவழியா ஐபிஎஸ் படிக்க போகும் சந்தியா… அர்ச்சனாவுக்கு தெரிஞ்சா கதையே வேற!

by Column Editor

ராஜா ராணி சீரியலில் சந்தியாவுக்கும் அவரின் அப்பாவுக்கும் ஐபிஎஸ் ஆவது தான் கனவு என்பது சரவணனுக்கு தெரியாது.

ராஜா ராணி சீரியலில் சந்தியாவின் ஆசையை நிறைவேற்ற சரவணன் முடிவு எடுத்துவிட்டார். ஏற்கெனவே சந்தியா மீது கடும் கோபத்தில் இருக்கும் அர்ச்சனாவுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நடக்குற கதையே வேற.

விஜய் டிவி சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார் சீரியல் நடிகை ஆல்யா மானசா. இவரை நம்பி சீரியல் எடுத்தால் நிச்சயம் வெற்றி என்று நம்பி ராஜா ராணி 2 சீரியலை இயக்க முடிவு செய்தார் இயக்குனர் பிரவீன். ராஜா ராணி முதல் பாகம் சூப்பர் டூப்பர் ஹிட். இப்போது 2 வது பாகத்தில் ஆல்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திருமணம் சீரியல் புகழ் சித்து நடிக்கிறார். இவருக்கென்றும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விஜய் டிவி-யில் இரவு 9.30 முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன்-2 சீரியலில் சந்தியா என்ற லீடிங் கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஆல்யா. இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.ஆனாலும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு பதில் சீரியலில் வேற யாரும் நடிக்க போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. அப்படி இருக்கையில், பிரசவ நேரத்தில் ஆல்யா தொடர்ந்து எப்படி நடிப்பார்? என்ற சந்தேகமும் உருவாகியுள்ளது.

கதைப்படி சந்தியாவின் அம்மா அப்பா யார் என்ற உண்மை சரவணனுக்கு தெரிந்து விட்டது. சந்தியா அப்பாவின் பேனாவும் சரவணனிடம் தான் இருந்தது. அதை சர்ப்பிரைஸாக சந்தியாவிடம் கொடுக்கிறார். அதுமட்டுமில்லை சந்தியா அப்பாவை பார்த்தது, அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தது என மொத்த உண்மையையும் சரவணன் சொல்ல சந்தியாவுக்கு அழுகையும் ஆனந்தமும் தாங்க முடியவில்லை.

இது இப்படி இருக்க, சந்தியாவுக்கும் அவரின் அப்பாவுக்கும் ஐபிஎஸ் ஆவது தான் கனவு என்பது சரவணனுக்கு தெரியாது. அதை சந்தியா இது வரை சொல்லியதும் இல்லை. இந்நிலையில், அந்த விஷயத்தை சந்தியாவின் அண்ணா, சரவணனுக்கு தெரியப்படுத்த நினைக்கிறார். தாம்பூல பையில் இந்த விஷயத்தை பற்றி கடிதம் ஒன்றையும் போட்டு அனுப்புகிறார். சரவணன் அந்த லெட்டரை பார்த்து, அதன் மூலம் சந்தியாவின் கனவை தெரிந்து கொண்டு ஐபிஎஸ் படிக்க வைப்பது தான் வரும் வாரங்களில் ராஜா ராணி2 வில் ஒளிப்பரப்பாகும் காட்சிகள்.

சந்தியா படிக்க செல்வது போல் காட்சிகளை மாற்றிவிட்டால், அதற்குள் ஆல்யா குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் நடிக்க வந்துவிடுவார் எனவும் இயக்குனர் திட்டமிட்டு இருக்கலாம். காரணம், பாரதி கண்ணம்மா சீரியலிலும் இதுதான் நடந்தது. ஆனால் சந்தியா படிப்பது மட்டும் அர்ச்சனாவுக்கு தெரிய வந்தால் வீடே ரெண்டாகிவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

Related Posts

Leave a Comment