ஒரே நேரத்தில் பாக்கியா, ராதிகாவை ஏமாற்றும் கோபி.. இதெல்லாம் ரொம்ப தப்பு சார்!

by Column Editor

ராதிகாவிடம் தன்னுடைய மனைவி விருப்படி தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டதாக பொய்களை அள்ளி விடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் ஏமாற்று வேலை எல்லை மீறி விட்டது. ஒரே நேரத்தில் பாக்கியா, ராதிகா என இருவரிடமும் பொய் பேசி வந்தவர், விவாகரத்து விஷயத்தில் வக்கீலிடம் பொய்களை அவிழ்த்து விடுகிறார்.

சீரியல் என்றாலே அது பெண்களுக்கு தான் என்ற காலம் போய் இப்போது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என மொத்த குடும்பத்தினரும் சீரியல் பார்க்க தொடங் விட்டனர். அனைத்து தரப்பினரையும் கவர வேண்டும் என்பதால் சீரியல் குழு திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. லவ் , ரொமான்ஸ் என்ற கோணத்தில் சில சீரியல்கள், வழக்கம் போல் மாமியார் மருமகள் பிரச்சனையில் சில சீரியல்கள், வில்லி vs நாயகி என்ற ஒன்லைனில் சில சீரியல்கள் என நாள் தோறும் 10க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒவ்வொரு சேனலிலும் ஒளிப்பரப்பாகுகின்றன.

அந்த வகையில் விஜய் டியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதை என்ற ஒன்லைனில் ஒளிபரப்பாக தொடங்கியது. ஆரம்பத்தில் டி.ஆர்.பி ரேசில் மெதுவாக சென்று கொண்டிருந்த சீரியலின் வேகத்தை கோபி – ராதிகா ட்ராக் மின்னல் வேகத்தில் கொண்டு சென்றது. மருமகள் வந்த பிறகும் கோபி தன்னுடைய முன்னாள் காதலியுடன் சேர நினைப்பது என்ற கதையை உள்ளே கொண்டு வந்து ரசிகர்களை கட்டி போட்டார் சீரியல் இயக்குனர். அதில் வெற்றியும் கண்டார். ஒரே நேரத்தில் 2 பெண்களை ஏமாற்றி வருகிறார் கோபி.

பாக்கியாவை பிடிக்கவில்லை என்றாலும் குடும்பத்திற்காக, பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ்கிறார். அதே போல் முன்னாள் காதலி ராதிகாவையும் அவரால் மறக்க முடியவில்லை. கதை இப்படியே பயணித்துக் கொண்டிருக்க கோபி யாரிடமும் மாட்டுவதாக தெரியவில்லை. உண்மை தெரிந்த கோபியின் அப்பாவும் இப்போது முடக்குவாதம் வந்து படுத்த படுக்கையானார். இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருக்கும் கோபி, பாக்கியாவை டைவர்ஸ் செய்துவிட்டு ராதிகவுடன் சேர்ந்து வாழ முடிவு எடுத்து விட்டார். ஏற்கெனவே ராதிகாவுக்கு டைவர்ஸ் கிடைத்துவிட்டது. கோபிக்கு டைவர்ஸ் கிடைத்தால் அடுத்தது கல்யாணம், தான் என கனவு கண்டு வருகிறார் ராதிகா.

இதற்கு ஒரு வக்கீலை இருவரும் சந்தித்தனர். விவாகரத்துக்கு கோர்டில் வழக்கு தொடர, டைவர்ஸ் பேப்பரில் பாக்கியாவிடம் கையெழுத்து வாங்கும் படி லாயர் சொல்லி விடுகிறார். உண்மையை சொல்லி கையெழுத்து வாங்க தைரியம் இல்லாதகோபி பாக்கியாவை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விடுகிறார். ஆனால் லாயர் மற்றும் ராதிகாவிடம் தன்னுடைய மனைவி விருப்படி தான் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டதாக பொய்களை அள்ளி விடுகிறார்.

ஆனால் இந்த உண்மை தெரியாமல் பாக்கியா, கோபி அவருடைய கம்பெனியில் பாட்னர் ஆக இவரை சேர்க்க தான் பேப்பரில் கையெழுத்து வாங்கி இருப்பதாக நினைத்துக் கொண்டு அதை பெருமையாக செல்வி அக்காவிடம் சொல்கிறார். ஆனால் உண்மை தெரிந்தால் தாங்குவாரா பாக்கியா?

Related Posts

Leave a Comment