ராதிகாவுடன் கல்யாண குஷி.. பாக்கியாவை திட்டி தீர்க்கும் கோபி!

by Column Editor

பாக்கியலட்சுமி கோபி காதலிக்காக மனைவியை ஏமாற்றி விவகாரத்து பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி பாக்கியாவை தேவையில்லாமல் திட்டி தீர்க்கிறார். பாக்கியா மீது மொத்த சொத்தையும் அவரின் அப்பா எழுதி வைத்த காரணத்தால் அதை சொல்லி சொல்லி பாக்கியாவை குத்திக்காட்ட வழக்கம் போல் அழுது தீர்க்கிறார் பாக்கியா.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் லிஸ்டில் பாரதி கண்ணம்மாவுக்கு அடுத்தப்படியாக பெரும் திருப்பத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். ராதிகா – கோபி திருமணம் தான் அந்த மொத்த பரபரப்புக்கும் காரணம். எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் சுற்றி கொண்டிருக்கிறார் கோபி. ஒருபக்கம் கோபியின் சுயரூபம் தெரிந்த அவரின் அப்பா, இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறார். உண்மை தெரிந்த ஒருவர் அவர் மட்டுமே. ஆனால் அவரும் இப்போது இந்த நிலையில் இருப்பதால் கோபிக்கு ஜாலி தான் என்ற கதை.

ராதிகாவுக்கு ராஜேஷிடமிருந்து ஏற்கெனவே விவாகரத்து கிடைத்து விட்டதால் கோபியை விவாகரத்து வாங்கும்படி தொடர்ந்து வற்புறுத்துகிறார். ஆனால் கோபி உண்மையை சொல்லி விவாகரத்து வாங்க முடியாததால் பொய் சொல்லி டைவர்ஸ் பேப்பரில் பாக்கியாவிடம் கையெழுத்து வாங்குகிறார். இதற்கான ப்ரோமோ ஏற்கெனவே வெளியாகி விட்டது. இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபக்கம் இருக்கையில் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு செழியன் கணக்கு பார்த்தது பாக்கியாவுக்கு தெரிந்து விட்டது. இதனால் பாக்கியா இனிமேல் செழியனிடம் பணம் வாங்க கூடாதுன்னு முடிவு எடுத்துவிட்டார். அதனால் கோபியிடம் பணம் கேட்டார் அதற்கும் கோபி பாக்கியாவை திட்ட, கண்கலங்கி நின்ற பாக்கியாவுக்கு வழக்கம் போல் எழில் வந்து உதவுகிறார்.

பாக்கியாவுக்கு அந்த வீட்டில் ஆறுதலாக இருப்பது எழில் மட்டுமே. ஒருபக்கம் இந்த பிரச்சனை, மறுபக்கம் கோபி காதலிக்காக மனைவியை ஏமாற்றி விவகாரத்து பேப்பரில் கையெழுத்து வாங்குகிறார். அநியாயத்திற்கு ஏமாளியாக இருக்கும் பாக்கியாவை பிளான் பண்ணி ஏமாற்றும் கோபி சீக்கிரத்தில் சிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment