அடங்காத அர்ச்சனா.. சந்தியாவுக்கு எதிராக அடுத்து செய்ய போகும் சதி வேலை இதுதான்!

by Column Editor

பிறக்க போகும், குழந்தை மீது சத்தியம் செய்து விட்டு சந்தியாவுக்கு எதிராக சதி வேலை செய்ய களத்தில் இறங்குகிறார்.

ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம் என பழிக்கு பழி வாங்க களத்தில் இறங்குகிறார் அர்ச்சனா. இத்தனை பிரச்சனைகளுக்கு பின்பும் அர்ச்சனா மாறவும் இல்லை, திருந்துவதற்கான முயற்சியும் எடுக்கவில்லை மாறாக, சந்தியாவுக்கு எதிராக அடுத்த சதி திட்டம் செய்ய கிளம்பிவிட்டார்.

விஜய் டெலிவிஷனில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாம மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்தி சீரியலின் தழுவலான ராஜா ராணி 2, ஆரம்பத்தில் நெகடிவ் விமர்சனங்களைபெற்றாலும், சித்து மற்றும் ஆல்யாவின் நடிப்பால் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் சேர்ந்தது. அன்று முதல் இன்று வரை நல்ல ரேட்டிங்கில் சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போது திரைக்கதையில் பல சுவாரசியமான திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இடையில் கர்ப்பமாக இருப்பதால் சந்தியாவாக நடிக்கும் ஆல்யா மானசா சீரியலை விட்டு போவதாக தகவல்கள் பரவின. இந்த முக்கிய கட்டத்தில் சீரியலை விட்டி நான் செல்ல மாட்டேன் என்று ஆல்யா தனது ரசிகர்களுக்கு உறுதிப்படுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சீரியல் எபிசோடில் அர்ச்சனா வாரம். சரவணன் அம்மா சிவகாமி மீது போலீஸில் புகார் கொடுத்தது முதல் சமீபத்தில் அம்மா அப்பாவுக்கு நெஞ்சுவலி என பொய் சொல்லிவிட்டு குற்றாலம் சென்று ஊர் சுற்றியது அரை அர்ச்சனா பற்றிய அனைத்து உண்மையும் குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. இந்த விவகாரத்தில் சரவணனும் செந்திலும் மாறி மாறி அடித்துக் கொள்கிறார்கள். உண்மை தெரிந்த பின்பு அர்ச்சனாவை செந்தில் அடித்து வெளியே துரத்தி வீட்டை விட்டு அனுப்புகிறார்.

இந்த மொத்த உண்மையும் சந்தியாவுக்கு தெரிந்த பின்பும் அவர் சிவகாமி அம்மாவிடம் இதை சொல்லாமல் மறைத்தார். ஆனால் போலீஸ் வந்து எல்லா உண்மையும் சொல்லி விடுகிறது. இதை அர்ச்சனாவிடம் விசாரிப்பதற்குள் , செந்தில் – அர்ச்சனா குற்றால் சென்றது, ஒருநாள் இரவு முழுவதும் லாக்கப்பில் இருந்தது என எல்லா உண்மையையும் போட்டு உடைக்க அர்ச்சனாவின் நிலைமை திண்டாட்டம் ஆகிறது.

கோபத்தில் செந்தில், அர்ச்சனாவை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார் சிவாமி. அந்த நேரம் தான் அர்ச்சனா கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. உடனே அனைவரும் அர்ச்சனாவை மன்னித்து விடுகிறார்கள். இனிமேல் ஆவது அர்ச்சனா திருந்திவிடுவார் என நம்பிக்கை கொள்கின்றனர். ஆனால் கோபத்தில் எரிமலையாய் வெடிக்கும் அர்ச்சனா, இந்த பிரச்சனை எல்லாவற்றுக்கும் சந்தியா தான் காரணம் என நினைத்து அவர் மீது வெறுப்பு கொள்கிறார்.

அதுமட்டுமில்லை பிறக்க போகும், குஅந்தை மீது சத்தியம் செய்து விட்டு சந்தியாவுக்கு எதிராக சதி வேலை செய்ய களத்தில் இறங்குகிறார்.

Related Posts

Leave a Comment