‘கேவலமா இருக்கு அபி’… காஃபி பாட்டிலை கோவமாக வீசிச்சென்ற வனிதா !

by Column Editor

காஃபி பொடியால் வனிதா மற்றும் அபிராமி சண்டைப் போடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் காஃபி கேட்டு வனிதா போராடி வந்தார். இதையடுத்து டாஸ்க் வெற்றி பெற்ற பின்னர் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் காஃபியை வைத்து ஒரு பிரளயமே பிக் பாஸ் வீட்டில் உருவாகியுள்ளது இது குறித்து இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ்மேட்டுகள் அனைவரும் கிச்சனில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் பேசும் வனிதா, ரெகுலராக டீ குடிப்பவர்களுக்கு ஒருவேளை மட்டும் காபி என்றும், இனிமேல் இந்த காபி பாட்டில் என்னுடைய கண்ரோல் மட்டும்தான் என்றும், மிச்சம் மீதி இருப்பதை நீங்க எடுத்துக்கோங்க என்று கூறுகிறார்.

இதையடுத்து அந்த காஃபி பாட்டிலை தன் பெட்டின் அடியில் மறைத்து வைக்கிறார். இதனால் கோபமடையும் அபிராமி, எனக்கு புரியல. எங்கே இருந்த காபி பாட்டிலை எடுத்துகிட்டு போறாங்க என்று ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்கிறார். இதைத்தொடர்ந்து வனிதாவிடம் செல்லும் அபிராமி, இது உங்களுடைய தனிப்பட்ட பொருள் அல்ல. எல்லோரும் டாஸ்க் வெற்றி பெற்று தான் இந்த காபி பாட்டிலை வாங்கி உள்ளோம் என்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் வனிதா, எங்க டீம் தானோ வெற்றிப்பெற்றோம் என்கிறார். நாங்கள் பாதுகாப்பான விளையாட்டு விளையாட வில்லை என்றால் காபி பாட்டில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருக்காது என்று அபிராமி சொல்ல, இந்த காஃபி பாட்டிலை வைத்துக்கொள். எனக்கு வேண்டாம். நீயே வைத்துக்கொள். இது ரொம்ப கேவலமாக இருக்கு என்று சொல்லி விட்டு கோவமாக செல்லும் வனிதாவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment