டாப் கியரில் செல்லும் சன் டிவி சுந்தரி சீரியல்.. கதையில் அப்படி ஒரு ட்விஸ்ட்!

by Column Editor

சுந்தரி என்ன முடிவு எடுப்பார்? என்பதை ரசிகர்களை இன்றைய எபிசோடில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சுந்தரி சீரியலின் திரைக்கதை ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த ட்விஸ்ட் தற்போது நிகழ்ந்து விட்டது. இத்தனை நாட்களாக சுந்தரியை ஏமாற்றிய அவரின் கணவர் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சுந்தரி சீரியல் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த சீரியல்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறது. இதே சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியலுக்கு அடுத்து டி.ஆர்.பியில் கலக்குவது சுந்தரி சீரியல் தான். சுந்தரியாக கேப்ரில்லா நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் ஆதரவு அதிகம். மோகன், ராதா, சுஹாசினி நடித்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதை தான் சுந்தரி சீரியலின் ஒன்லைன். அதே நேரம் திரைக்கதையில் சில பல சுவாரசியங்களை சேர்த்து இயக்குனர் கதையை நகர்த்தி வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே சீரியல் கதைக்களத்தில் கஸ்தூரி என்ற நெடுந்தொடரும் ஒளிப்பரப்பாகி ஹிட் அடித்தது. இந்நிலையில் டஸ்கி நிறத்தில், கஷ்டப்பட்டு படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சுந்தரிக்கு, கார்த்திக் உடன் திருமணம் நடக்கிறது. ஆனால் கார்த்திக்கு இதில் துளியும் விருப்பமில்லை. பெற்றோர்கள் வற்புறுத்தலால் கல்யாணம் நடக்க, சுந்தரியை விட்டு பிரிந்து வெளியூர் செல்கிறார். அங்கு அனு என்ற பணக்கார வீட்டு அழகான பெண்ணை பார்த்து கல்யாணமும் செய்து கொள்கிறார்.

முதல் திருமணம் ஆன விஷயத்தை மறைத்து இத்தனை நாட்களாக கார்த்திக் நாடகம் ஆடி வந்தார். இந்நிலையில் தான் அனுவின் ஆபீஸில் சுந்தரிக்கு வேலை கிடைக்க கார்த்திக்கின் நிலைமை மோசமானது. சுந்தரி இல்லாத நேரத்தில் மட்டும் அனுவை சந்தித்துக் கொண்டிருந்தார் கார்த்திக். இந்நிலையில், அனுவுக்கு சர்ப்பிரைஸ் பிளான் செய்ய, அதில் வசமாக சிக்கிக் கொண்டார் கார்த்திக்.

அனுவின் கணவர் கார்த்திக் தான் என்ற உண்மை சுந்தரிக்கு தற்போது தெரிந்து விட்டது. இப்போது சுந்தரி அடுத்து, எடுக்க போகும் முடிவு என்ன? என்பது தான் கதையின் அடுத்த ட்விஸ்ட். சுந்தரியின் நிறத்தை அவமானப்படுத்தி கார்த்திக் பேசுகிறார். இதனால் உடைந்து அழுகிறார் சுந்தரி. இப்போது என்ன முடிவு எடுப்பார்? என்பதை ரசிகர்களை இன்றைய எபிசோடில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Posts

Leave a Comment