பிக்பாஸ் வீட்டில் கற்றுக்கொண்டது என்ன தெரியுமா ?… ராஜுவின் விளக்கம் !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் தான் கற்றுக்கொண்டது குறித்து ராஜு விளக்கமளிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ ஃப்னாலே டாஸ்க் முடிவடைந்துள்ளது. இதில் அமீர் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்ல உள்ளார். இதையடுத்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். முதலில் பேசிய பிரியங்கா, நான் எமோஷனல் நபர்தான் என்று கூறும் ப்ரோமோ வெளியானது.

இதையடுத்து மூன்றாவது ஃப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் தான் கற்றுக்கொண்டது என்ன தெரியுமா என்று ராஜு கூறுகிறார். அதில் பேசும் அவர், முதலில் எங்கள் வீட்டில் இருப்பவர்களிடம் பேசவேண்டும் என்று கற்றுக்கொண்டேன். தினமும் என் அம்மாவுக்கு போன் செய்து ஹலோ சாப்பிட்டியா, சாப்பிட்டேன் என்று மட்டும் தான் கேட்பேன். மற்ற அவங்க மனசுல என்ன ஓடுது. நான் என்ன பண்ணனும் எதிர்பார்க்கிற என கேட்டதே இல்லை.

வீட்டில் உள்ள எல்லாரிடமும் தனி கவனம் செலுத்தவேண்டும். அதைதான் நான் இந்த பிக்பாஸ் வீட்டில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன் என்று ராஜு, சக போட்டியாளர்களிடம் பேசினார். ராஜுவின் இந்த பேச்சு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் கண்டிப்பாக ராஜு தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment