அர்ச்சனாவை குழுவாக சேர்ந்து தாக்கும் போட்டியாளர்கள்- எல்லை மீறிய வாக்குவாதம்..

by Lifestyle Editor

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த வாரங்களிலிருந்து பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கள் அதிகமாகி வருகின்றது. இதனால் போட்டியாளர்கள் தங்களை அதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பொம்மை டாஸ்க் கொடுக்கபட்டுள்ளது. இதன்போது நிக்ஷன், அர்ச்சனாவையும் வைல்ட் கார்ட் போட்டியாளர்களையும் அசிங்கப்படுத்தி பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் தரம் குறைவான வார்த்தைகளால் அர்ச்சனாவை திட்டியுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்த மற்ற போட்டியாளர்கள் அந்த இடத்திலிருந்து வந்து நிக்ஷனை அழைத்து சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து என்ன பிரச்சினை வெடிக்கும் என்பதனை இனி வரவிருக்கும் ப்ரோமோக்களில் பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment