நான் ஒரு எமோஷ்னல் நபர்தான்.. ஒத்துக்கொண்ட பிரியங்கா !

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் பிரியங்கா தன்நிலை விளக்கம் கொடுக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்கு நேரடியாக செல்ல டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டது. பல கட்டங்களாக நடைபெற்று வந்த இந்த டாஸ்க்கில் அமீர் வெற்றிபெற்று நேரடியாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளார். இதையடுத்து தற்போது இன்றைய தினத்தின் இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

அதில் பிரியங்கா, தன்நிலை விளக்கம் கொடுத்து பேசும்போது நான் எமோஷ்னல் நபர் என்பது எனக்கு முதலில் இருந்து தெரிந்தாலும் ஒரு விஷயம் உன்னுடையதாக இருந்துச்சினா, அது கண்டிப்பாக உன்னிடம்தான் இருக்கும். அது உன்னிடையது இல்லையென்றால் அதை ப்ரீயா விட்டுவிட வேண்டும்.

திரும்பவும் வந்துவிட்டால் அது உன்னுடையது. அது திரும்ப வரவில்லை என்றால் உன்னுடையதே கிடையாது. இந்த ஒரு விஷயம் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபிறகு கற்றுக்கொண்ட விஷயம் என்று சக போட்டியாளர்களிடம் பிரியங்கா விளக்கினார். பிரியங்காவின் இந்த சுய விளக்கம் கேமுக்கான புதிய யுக்தியா என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment