கடினமான போட்டியில் அமீர் – சிபி: டிக்கெட் டூ ஃபினாலேவில் வெற்றி பெறப்போவது யார்?

by Column Editor

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் டிக்கெட் டூ ஃபினாலேவின் கடைசி டாஸ்க் வழங்கப்படுகிறது. இதில் அமீர் மற்றும் சிபி இருவரும் பங்கு பெறுகிறார்கள்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதையடுத்து நாடியா சங், அபிஷேக் ராஜா, பாடகி சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபினய் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்‌ஷரா, வருண் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தவிர, அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் டிக்கெட் டூ ஃபினாலேவின் கடைசி டாஸ்க் வழங்கப்படுகிறது. இதில் அமீர் மற்றும் சிபி இருவரும் பங்கு பெறுகிறார்கள். தனித்தனியான ஃப்ரேம்களில் மணல் மூட்டை வைக்கப்பட்டு மறுபுறம் போட்டியாளர்கள் கயிற்றை இழுத்துப் பிடிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிப்பில் குறிப்பிடப்படுகிறது. மணல் மூட்டை கயிறை பிடித்துக் கொண்டு, போட்டியாளர்கள் ஒரு காலில் நிற்க வேண்டும் என்பதற்கேற்ப சிபியும், அமீரும் நிற்கிறார்கள். இதில் யார் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment