அடகடவுளா… இந்த வாரம் வெளியேறியது இவரா ?…

by Lifestyle Editor

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் 50வது நாளை எட்டவுள்ளது. இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். 14‌ போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சதிஷ், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர்.

இந்த வாரம் கோழி கூவுசு என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் விளையாடினர். இதில் சரியாக விளையாடாத நிரூப், தாமரை, ஜூலி, சதீஷ், சுருதி மற்றும் அனிதா சம்பத் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். ஆனால் பாலாஜி முருகதாஸ், அபிராமி, ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட நல்ல விளையாடியதால் பாதுகாக்கப்பட்டனர்.

இந்த நாமினேஷனில் சுருதி, அனிதா சம்பத், சதீஷ் ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்றனர். குறிப்பாக அனிதா சம்பத் தான் மிகவும் டேஞ்சர் ஜோனில் இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ்‌ அல்டிமேட்டில்‌‌ இருந்து இந்த வாரம் அனிதா சம்பத் வெளியேறியுள்ளார். பெரிதாக பேசப்பட்ட‌ அனிதா சம்பத் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment