தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம்… சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்தது..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 612 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, முன்னணி நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், விப்ரோ மற்றும் ஐ.டி.சி. உள்படமொத்தம் 3 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,438 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 902 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 106 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.22 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.54 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 611.55 புள்ளிகள் உயர்ந்து 56,930.56 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 184.60 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,955.45 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment