சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்தது.

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 187 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டது. அதன் பிறகு பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,095 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,238 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 78 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.264.08 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.76 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 187.39 புள்ளிகள் உயர்ந்து 57,808.58 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 53.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,266.75 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment