தொடரும் பங்குச் சந்தைகளில் ஏற்றம்… சென்செக்ஸ் 1,016 புள்ளிகள் உயர்ந்தது..

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 1,016 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் இந்த நிதியாண்டின் 5வது நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. இது பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்து முக்கிய காரணம். சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் கோடக் மகிந்திரா வங்கி மற்றும் பவர் கிரிட் ஆகிய 2 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 28 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,328 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 950 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.264.21 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.98 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,016.03 புள்ளிகள் உயர்ந்து 58,649.68 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 293.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,469.75 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment