விஷால் படத்தின் டப்பிங்கை முடித்த யோகிபாபு.. படக்குழு அறிவிப்பு

by Column Editor

விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் டப்பிங்கை நடிகர் யோகிபாபு முடித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தை வி.எப்.எப் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.

இந்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட இப்படம் தயாரிப்பு பணிகள் முடியாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் பிப்ரவரி மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் படத்தில் யோகிபாபு நடிக்கும் காட்சிகளின் டப்பிங்கை அவர் இன்று நிறைவு செய்தார். இம்மாத இறுதிக்குள் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment