தொடரும் இந்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி…

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 769 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு ஆலையில் ரஷ்யாவின் ஷெல் தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் மாருதி உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,226 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,128 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 103 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.246.71 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.4.36 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 768.87 புள்ளிகள் குறைந்து 54,333.81 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 252.70 புள்ளிகள் சரிவு கண்டு 16,245.35 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment