சென்செக்ஸ் 323 புள்ளிகள் வீழ்ச்சி.. ரூ.52 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 323 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அதன் பிறகு பங்கு வர்த்தகம் மந்தகதியில் இருந்தது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி சுசுகி மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,955 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,334 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.263.45 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 323.34 புள்ளிகள் குறைந்து 58,340.99 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 88.30 புள்ளிகள் சரிவு கண்டு 17,415.05 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment