தொடர்ந்து 2வது நாளாக பங்கு வர்த்தகம் சரிவு

by Column Editor

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 81 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் நடுவே பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இருப்பினும் இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் மகிந்திரா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,713 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,597 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 147 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.268.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.83 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 80.63 புள்ளிகள் குறைந்து 60,352.82 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 27.05 புள்ளிகள் சரிவு கண்டு 18,017.20 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment