சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 635 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய ரிசர்வ் வங்கி தனது மாதாந்திர அறிக்கையில், தற்போது பணவீக்கம் சிறிது குறைந்திருக்கலாம் ஆனால் நிச்சயமாக வெளியேறவில்லை என்று தெரிவித்து இருந்தது, அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்பட மொத்தம் 7 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் அல்ட்ராக்டெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 23 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 789 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,762 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 113 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.282.91 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.4.54 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 635.05 புள்ளிகள் குறைந்து 61,067.24 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 186.20 புள்ளிகள் சரிவு கண்டு 18,199.10 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment