பங்கு வர்த்தகத்தின் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி.. சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி ..

by Lifestyle Editor

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 416 புள்ளிகள் சரிவு கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. முதலீட்டாளர்கள் லாபம் கருதி அதிகளவில் பங்குகள விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் டாக்டர்ரெட்டீஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,025 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,454 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.289.58 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இன்று ஒட்டு மொத்த அளவில் ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 415.69 புள்ளிகள் உயர்ந்து 62,868.50 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 116.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 18,696.10 புள்ளிகளில் முடிவுற்றது.

Related Posts

Leave a Comment