உயர்ந்தது தங்கம் விலை..!

by Lifestyle Editor

சென்னையில் நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.5730க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலையை போல் வெள்ளி விலையும் உயர்ந்தது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் உயர்ந்து ரூ.79.40க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 10 ரூபாய் உயர்ந்து ரூ. 5740க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 79 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Related Posts

Leave a Comment