கார்த்திக்கை வேலையில் இருந்து தூக்க ஆனந்த் பார்க்கும் உள்ளடி வேலை…

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கம்பெனியில் தொழிலாளி ஒருவருக்கு அடி பட கார்த்திக் அவருக்கு உதவி செய்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, கார்த்திக் அடிபட்ட தொழிலாளருக்கு உதவி செய்ததை வைத்து அவன் வேலையே செய்ய மாட்டுறான் என்று சொல்லி வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்ப பிளான் போடுகின்றனர் அருண் மற்றும் ஆனந்த்.

பிறகு இந்த விஷயத்தை தொழிலாளர்களிடம் சொல்ல அதற்கு அனைவரும் மறுப்பு தெரிகின்றனர். கார்த்திக் தம்பி எங்களுக்கு நல்லது தான் பண்ணாரு, அடி பட்டவருக்கு உதவியது தப்பா என்று கேட்கின்றனர், ஆனாலும் கார்த்தியை வேலையில் இருப்பது தூக்குவது உறுதி என்று சொல்கின்றனர்.

இதனால் தொழிலாளர்கள் கார்த்திக் தம்பியை வேலையில் இருந்து எடுத்தால் எங்களையும் வேலையில் இருந்து தூக்கி வீட்டிற்கு அனுப்புங்க என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர், பிரச்சனை வேற மாதிரி சென்று விட்டதால் அருண் ஆனந்த் எதுவும் செய்ய முடியாமல் தங்களது முடிவை கை விடுகின்றனர்.

அடுத்து கார்த்திக் டயார்டாக வீட்டிற்கு வர தீபா வேலை எப்படி போச்சு என்று கேட்டு கை, கால் பிடித்து விடவா? தலையை பிடித்து விடவா என்று கேட்க கார்த்திக் வேண்டாம் என்று மறுக்கிறான்,

இதனால் வேலை செய்து களைப்பில் வந்த புருஷனுக்கு எதுவும் செய்ய முடியலையே என்று தீபா வருத்தமாக வெளியே கிளம்ப கார்த்திக் கையை பிடித்து இழுத்து காதல் பார்வையுடன் பார்க்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment