வாந்தி எடுத்து பாக்கியாவிடம் மாட்டிக் கொண்ட ராதிகா

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.

செழியன் வாழ்க்கையை சரிசெய்த பாக்கியா, தனது வேலையை கவனித்து வரும் நிலையில், ராதிகா கர்ப்பமாகியுள்ளதாக கதை செல்கின்றது.

இது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாத நிலையில், சமையலறைக்கு வந்த ராதிகா தாளிப்பு மணம் பிடிக்காமல் வாந்தி எடுக்கவே, உடனே பாக்கியாவிற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Related Posts

Leave a Comment