தர்ஷினியை ஜீவானந்தம் வீட்டில் சேர்த்துவிடுவாரா?எதிர்நீச்சல் சீரியல்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

தற்போதுள்ள கதைக்களத்தில் தர்ஷினி பெற்ற தந்தையால் கடத்தப்பட்டு சில ரவுடிகளால் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அவரை ஜீவானந்தம் சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளார். அதற்குள் ஜீவானந்தத்தினை பொலிசார் தவறாக நினைத்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொலிசாரின் குழப்பத்திற்கு தர்ஷினி வாயைத் திறந்து கூறினால் தான் உண்மை என்ன என்பது வெளிவரும். மற்றொரு புறம் அண்ணன்கள் பிரிந்திருப்பதை சக்தி எடுத்துக்கூறி ஒன்றாக இருக்க கூறுகின்றார்.

Related Posts

Leave a Comment