முத்துப்பாண்டியின் சதியால் ஸ்கூலில் இருந்து திடீரென டிஸ்மிஸ் செய்யப்படும் ரத்னா

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் ஸ்கூல் மேடையில் இங்கிலீஷில் பேச வந்து இருப்பது ஷண்முகம் தான் என சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இங்கிலீஷில் பேசி அசத்தும் ஷண்முகம் நான் என்னைக்குமே வேட்டி சட்டையை தான் போடுவேன், அது தான் நம்முடைய அடையாளம். வேட்டி சட்டையை காட்டினாலே உங்கள் ஷண்முகம் தான் என பேச, எல்லாரும் ஜோராக கைதட்டி உற்சாகப்படுத்த, சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். சனியனும் கையை தட்டி நம்ம ஷண்முகமா இப்படி என்று ஆச்சரியப்பட்டு பேச, சௌந்தரபாண்டி அடித்து துரத்துகிறார். அவனை நான் சும்மா விட மாட்டேன் என்று சவால் விடுகிறார்.

அடுத்து ஷண்முகம் வீட்டிற்கு கிளம்பி வர, வீட்டில் வைகுண்டம் என் புள்ளையை நானே படிக்க வைக்காமல் விட்டுட்டேன், அவனும் பிடிச்சிருந்தா இன்னைக்கு மாதிரி எப்பவும் கோர்ட் சூட் போட்டு வேலைக்கு போய் இருப்பான் என்று கண் கலங்க பரணி ஆறுதல் சொல்கிறாள். பிறகு ஷண்முகம் வீட்டிற்கு வர கனியும் ரத்னாவும் ஸ்கூலில் கிடைத்த பாராட்டுகளை பற்றி சொல்கின்றனர். ரத்னா பரணியிடம் கண்டிப்பா உங்க அப்பா சும்மா இருக்க மாட்டாரு, ஏதாவது செய்வார் என்று சொல்கிறாள். அதற்கேற்றார் போல் சௌந்தரபாண்டி ஸ்கூல் ஓனருக்கு போன் செய்து ரத்னாவை வேலையில் இருந்து தூக்க சொல்ல, அவர் முடியாது என்று மறுத்து விடுகிறார்.

உடனே முத்துப்பாண்டி ஸ்கூல் ஓனருக்கு போனை போட்டு நீ அவளை வேலையில் இருந்து எடுக்கலனா ஸ்கூல்ல கஞ்சா விற்கறீங்கனு பொய் கேஸ் போட்டு ஸ்கூல் மானத்தை வாங்கிடுவேன் என்று மிரட்ட, பிரின்சிபால் ரத்னாவை வேலையில் இருந்து தூக்குகிறார், முத்துபாண்டியும் சௌந்தரபாண்டியும் நாங்க தான் டி தூக்க சொன்னோம் என்று பேச, ரத்னா அழுது கொண்டே வீட்டிற்கு வருகிறாள். விஷயம் அறியும் ஷண்முகம் கோபப்பட்டு அரிவாளை எடுத்து கொண்டு கிளம்ப, பரணி தடுத்து நிறுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment