அபிராமியுடன் கூட்டு சேரும் தீபா.. அம்பலமாகும் ரியா பற்றிய ரகசியங்கள்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ரியா மதுவை சந்தித்து பேச அதை மீனாட்சி, மைதிலி பார்த்த பின்னர் ரியா பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக உடையத் தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மதுவிற்கு வலிப்பு வந்து கீழே ரியா எனக்கு யார் என்று தெரியாது என்று நழுவிக் கொள்ள மீனாட்சி, மைதிலி ஆகியோர் மதுவை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்து அவரிடம் பேச்சுக் கொடுக்க ரியா குறித்த விஷயங்கள் தெரிய வருகிறது. மறுபக்கம் கார்த்திக் வீட்டுக்கு வர அபிராமி மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து சமையல் செய்ய இதை பார்த்தாயா அபிராமி மனதில் இடம் பிடிக்க நாம் ஏதாவது பண்ணலாம்னு பார்த்தா இந்த தீபா கூடவே இருக்கா என கடுப்பாகிறாள்.

அடுத்து மீண்டும் மில் கட்டப்பட தொழிலாளர்கள் எல்லோரும் பாட்டு போட்டு வேலை செய்ய, ஆனந்த் என்ன இதெல்லாம் என்று கேள்வியை கார்த்திக் காலையில ரெண்டு மணி நேரமா மிஷின் வேலை செய்யல அதனால கம்பெனிக்கு நஷ்டம் வரக்கூடாது என ஓவர் டைம் வேலை பாக்குறாங்க. அதனால உனக்கு என்ன பிரச்சனை என்று பதிலடி கொடுக்கிறான்.

இதையடுத்து ஆனந்த் எடுத்த முடிவு என்ன? ரியா பற்றிய உண்மைகள் உடைந்ததால் அவர் மீது அபிராமி ஆக்‌ஷன் எடுப்பாரா? இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment