பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட சரிகமப சீசன் 4 நிகழ்ச்சி..

by Lifestyle Editor

சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி இப்போது பாடல், நடனம், காமெடி, கேம் ஷோ என நிறைய நிகழ்ச்சிகள் மக்களால் வரவேற்கப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல் ஜீ தமிழிலும் சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சரிகமப நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.

ஜீ தமிழில் சரிகமப முதல் சீசன் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டிருக்கிறது.

3 சீசன்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது, மொத்தம் 76 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இந்த நிலையில் ஜீ தமிழில் சரிகமப 4வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

பெரியவர்களுக்கான 4வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது, அந்நிகழ்ச்சியின் புரொமோவும் வெளியாகியுள்ளது. அதில் புதிய நடுவராக ஸ்வேதா இணைந்துள்ளார்.

Related Posts

Leave a Comment