இன்று தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு..

by Lifestyle Editor

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 6 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் மிகவும் ஆர்வமாக வாக்கு செலுத்தி வருகின்றனர்.

சேலம் சிலுவம்பாளையத்தில் மகனுடன் வாக்களித்தார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

விருகம்பாக்கத்தில் வாக்களித்தார் தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன்.

திருச்சி கிராப்பட்டியில் வாக்களித்தார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

சென்னை விருகம்பாக்கத்தில் மனைவியுடன் வாக்களித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.

சென்னை சாலிகிராமத்தில் மகன்களுடன் வாக்களித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

திண்டிவனத்தில் வாக்களித்தார் தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி.

கோவை கணபதி பகுதியில் வாக்களித்தார் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்.

Related Posts

Leave a Comment