புது சீரியலை களமிறக்கும் சன் டிவி…

by Lifestyle Editor

சீரியல் என்றாலே சன் டிவி தான். சன் டிவி தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், அது மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளதற்கு முக்கிய காரணம் சீரியல்கள் தான். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சீரியல் ஓராண்டு ஓடினாலே ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. ஆனால் சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் மக்களை மகிழ்வித்து வருவதால் அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தற்போது சன் டிவியில் எதிர்நீச்சல், கயல், இனியா, ஆனந்த ராகம் என ஏராளமான சீரியல்கள் சக்கைப்போடு போட்டு டிஆர்பி ரேட்டிங்கிலும் டாப் 10-ல் உள்ளது. இந்த நிலையில் தங்களது முக்கிய சீரியல் ஒன்றை முடிவுக்கு கொண்டு வருகிறது சன் டிவி. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலை தான் முடிவுக்கு கொண்டுவர உள்ளது சன் டிவி. அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.

அன்பே வா சீரியல் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் கடந்த ஜனவரி மாதம் தான் வெற்றிகரமாக ஆயிரம் எபிசோடுகளை கடந்ததாக சீரியல் குழுவினர் கொண்டாடினர். இருப்பினும் தற்போது திடீரென அந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்து உள்ளனர். விரைவில் அன்பே வா சீரியலின் கிளைமாக்ஸ் ஒளிபரப்பாகும்.

அன்பே வா சீரியல் முடிவுக்கு வரும் நிலையில், மற்றொரு புது சீரியலை களமிறக்கி உள்ளது சன் டிவி. அதன்படி மல்லி என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாகும் என புரோமோவும் வெளியாகி உள்ளது. இந்த சீரியலில் விஜய் வெங்கடேசன் என்பவர் தான் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இவர் இதற்கு முன்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான பேரன்பு, பிரியாத வரம் வேண்டும் போன்ற தொடர்களில் நடித்தவர் ஆவார். அவருக்கு ஜோடியாக சூர்யவம்சம் சீரியல் பிரபலம் நிகிதா நடிக்க உள்ளார். இதன் ஒளிபரப்பு நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related Posts

Leave a Comment