யோவ் மாமா உன்னோட பொண்ணு எனக்கு வேணாம்யா? கரிகாலன் கொடுத்த டுவிஸ்ட்

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

குணசேகரன் ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடிகளால் தர்ஷினி கடத்தப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து ஜீவானந்தம் காப்பாற்றிய நிலையில், பொலிசார் மீட்டு குணசேகரனிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால் ஜீவானந்தத்தினை அப்பா என்று அழைக்கும் தர்ஷினி அவரை நினைத்து கடுமையாக வேதனைப்பட்டு வருகின்றார்.

இதனிடையே கரிகாலன் தர்ஷினியை திருமணம் செய்ய நெருக்கடி கொடுத்துள்ளார். ஆனால் இடையே ஏற்பட்ட பிரச்சினையில், கரிகாலனை கழுத்தை பிடித்து ஞானம், கதிர் வெளியே தள்ளியுள்ளனர்.

இந்நிலையில் இதனை வேடிக்கை பார்த்த குணசேகரனைப் பார்த்து உனது பொண்ணு எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment